தரம் 5 புலமைப் பரிசில், க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்!!

1177

EDU

ஏற்­க­னவே திட்­ட­மிட்­ட­படி தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்­வரும் 23ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட­ளா­விய ரீதியில் நடைபெ­ற­வுள்­ளது. இதற்­கான ஏற்­பா­டு­களை பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகு­மார மேற்­கொண்­டுள்ளார்.

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்­சைக்கு நாட­ளா­விய ரீதியில் 2907 பரீட்சை நிலை­யங்­களில் மொத்தம் 03 இலட்­சத்து 40 ஆயி­ரத்தி 926 மாண­வர்கள் தோற்­ற­வுள்­ளனர். இவர்­களில் 02 இலட்­சத்து 54 ஆயி­ரத்து 373 மாண­வர்கள் சிங்­கள மொழி மூலமும், 86 ஆயி­ரத்து 553 மாண­வர்கள் தமிழ் மொழி­மூ­லமும் தோற்­றுவர்.

இதே­வேளை, கடந்த 04ஆம் திகதி ஆரம்­ப­மாகி 17ஆம் திகதி நடை­பெற்ற பாரா­ளு­மன்ற பொதுத் தோ்தலுக்­காக கடந்த 13ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை நிறுத்­தப்­பட்ட க.பொ.த உயர்­தரப் பரீட்சை எதிர்வரும் 24ஆம் திகதி திங்­கட்­கி­ழமை மீண்டும் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 14 முதல் 23ஆம் திகதி வரை­யான காலப் பகு­தியில் உயர்­த­ரப்­ப­ரீட்சை நடைபெறவில்லை. இது­கு­றித்து முன்­கூட்­டியே பரீட்­சார்த்­தி­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

மீண்டும் 24ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மாகும் க.பொ.த. உயர்­தரப் பரீட்சை செப்டெம்பர் 08ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. 2015 பாரா­ளு­மன்ற பொதுத் தேர்தலை­யொட்டி க.பொ.த. உயர்­தரப் பரீட்­சையை இரு­கட்­டங்­க­ளாக நடத்­து­வ­தற்கு பரீட்­சைகள் திணைக்­களம் நட­வ­டிக்கை மேற்­கொண்­டி­ருந்­தது.

இதன்­பி­ர­காரம், கடந்த 04ஆம் திகதி முதல் 13ஆம் திக­தி­வ­ரையும், 24 முதல் செப்­ெடம்பர் 08 வரை­யான காலப்பகுதியில் நேர­சூசி தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­த­மை குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­போது நடை­பெற்­று­வரும் க.பொ.த. உயர்­தரப் பரீட்­சைக்கு நாட­ளா­விய ரீதியில் 03 இலட்­சத்து 09 ஆயி­ரத்து 69 பேர் தோற்­றி­ வ­ரு­கின்­றனர். இவர்­களில் 02 இலட்­சத்து 36 ஆயி­ரத்து 72 பேர் பாட­சாலை பரீட்­சார்த்­தி­களும், 72 ஆயி­ரத்து 997 பேர் தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­களும் அடங்­குவர். இவர்கள் நாட­ளா­விய ரீதியில் உள்ள 2180 பரீட்சை நிலை­யங்­களில் பரீட்­சைக்கு தோற்­றி­வ­ரு­கின்­றனர்.

அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, சம்­மாந்­துறை, திருக்­கோவில் கல்வி வல­யங்­களை உள்­ள­டக்­கிய கல்­முனை கல்வி மாவட்­டத்தில் 23ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள தரம் 05 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்­கான ஏற்­பா­டுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். கல்முனை கல்வி மாவட்டத்தில் 49 நிலையங்களில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறுவதுடன், 71 நிலையங்களில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.