இரு பெண்களை கத்தியினால் குத்தியும் பொல்லுகளினால் தாக்கியும் படுகாயங்களுக்குள்ளாக்கிய பதினேழு வயது நிரம்பிய சிறுவன் தலைமறைவாகியுள்ளான்.
மடுல் சீமை மெட்டிகாதன்னை என்ற இடத்தைச் சேர்ந்த ஸ்ரீயாணி தேவிகா எனும் 29 வயது நிரம்பிய பெண்ணும் டி.எம்.சந்திராவதி என்ற 45 வயது நிரம்பிய பெண்ணுமே மேற்படி சிறுவனால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் 25 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத் தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென்றும் தாக்குதலை மேற்கொண்ட சிறுவன் தலைமறைவாகியுள்ளான்.
சிறுவனைக் கைது செய்யும் பொருட்டு மடுல்சீமைப் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஸ்ரீயானி தேவிகா என்ற பெண்ணை கொலை செய்ய முயன்ற வேளையில் மற்றைய பெண் தடுக்க முயன்ற போதே இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.





