14 வயது சிறுமியை கடத்திசென்று பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேகநபருக்கு விளக்கமறியல்!!

616

Teen-Dating-Violence-1அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத்தை சேர்ந்த 14 வயது சிறு­மியை கடத்திச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோகம் மேற்­கொண்ட சந்­தேக நபரை எதிர்­வரும் 10 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதி­பதி உத்­த­ர­விட்டார்.

அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தியும் மேல­திக நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யு­மான எச்.எம்.முஹம்மட் பஸீல் முன்­னி­லையில் சந்தேக நபரை ஆஜர்­ப­டுத்­தி­ய­போதே மேற்­படி உத்­த­ரவை பிறப்­பித்தார்.

இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி ய­வ­ரு­வ­தா­வது;

அக்­க­ரைப்­பற்று அளிக்­கம்பை தேவ கிரா­மத்தை சேர்ந்த 20 வயது இளம் குடு­ம்பஸ்தர் ஒருவர் ஆலை­யடி வேம் பைச்சேர்ந்த 14 வயது சிறு­மியை ஆசை வார்த்­தை­களை கூறி கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி பஸ்ஸில் கதிர்­கா­மத்துக்கு அழைத்து சென்று அங்கு சிறிது காலம் வாழ்ந்து வந்­துள்ளனர்.

பின்னர் இரு­வரும் சிறு­மியின் ஆலை­யடி வேம்பு பிர­தே­சத்தில் உள்ள வீட்­டிற்கு வந்து அங்கு வசித்து வந்­துள்­ளனர். இச்­சம்­பவம் தொடர்­பாக சந்­தேக நபரின் மனைவி பொலிஸில் செய்த முறைப்­பாட்டை­ய­டுத்து பொலிசார் இரு­வ­ரையும் கைது செய்து சந்­தேக நபரை நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தினர். சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.