
வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கடந்த 4 நாட்களாக காணமல் போயுள்ளார்.
காணாமல் போன பொலிஸ் சார்ஜென்ட் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.
இப் பொலிஸாரின் மனைவி வவுனியா பொலிஸாரிடமும் தம்புத்தேகம பொலிஸாரிடமும் இரண்டு முறைப்பாடுகளை சமர்பித்துள்ளார்.
தனது கணவர் கடத்தப்பட்டிருப்பார் என சந்தேகிப்பதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.





