இலங்கையுடனான உறவுக்கு முக்கியத்துவம் : நரேந்திர மோடி!!

474

chandrika-modi-11இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன் போது கருத்துரைத்த நரேந்திர மோடி, இலங்கையுடன் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளுக்கு இந்தியா அதி முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் சமுக முறுகல் நிலையை தணித்து, சீரான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.

அத்துடன் ஏனைய அனைத்து வகையான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசாங்கம் இலங்கையுடன் இணைந்தே பயணிக்கும் என்றும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.