வவுனியா செட்டிகுளம் நேரியகுளம் மன்னார் வீதி மாங்குளம் பகுதியில் இன்று 16.09.2015 காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்து நேரியகுளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த சப்ரின் (வயது 26), மற்றும் துவிச்சக்கரவண்டியில் பயணித்த சலீம் ஆகியோரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை நேரியயகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.