வஸீமின் ஜனாஸா நாளை நல்லடக்கம்!!

499

gr1

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் தோண்டி எடுக்­கப்­பட்ட சடலம் நாளைய தினம் மீள நல்­ல­டக்கம் செய்­யப்­ப­ட­வுள்­ளது..

வஸீம் தாஜு­தீனின் ஜனா­ஸாவை நல்­ல­டக்கம் செய்­வது குறித்து குற்றப் புல­னாய்வுப் பிரிவு கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸிடம் நேற்று முன்தினம் முன்வைத்த கோரிக்­கைக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்ட நிலை­யி­லேயே நாளை வெள்­ளிக்­கி­ழமை ஜனஸா மீள நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­ட­வுள்­ளது.

தஜு­தீனின் சடலம் மீதான விசா­ர­ணைகள் நிறைவுபெற்­று­விட்­ட­தா­கவும் அதனால் ஜனா­ஸாவை அடக்கம் செய்ய அனு­ம­திக்­கு­மாறும் புல­னாய்வுப் பிரிவினர் நீதி­வா­னிடம் நேற்று முன்தினம் கோரினர். இத­னை­ய­டுத்தே இந்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி மேல­திக சட்ட வைத்­திய தேவை­க­ளுக்­காக தோண்­டி­யெடுக்­கப்­பட்ட வஸீம் தாஜு­தீனின் ஜனா­ஸாவை 2015 செப்ெடம்பர் மாதம் 18 ஆம் திகதி நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக வஸீமின் சகோ­த­ரி­யான ஆயிஷா தாஜு­தீ­னிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

அத்­துடன் வஸீமின் ஜனா­ஸாவை மீள அடக்கம் செய்யும் போது தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் செய்­யு­மாறு தெஹி­வளை ஜும் ஆப் பள்­ளி­வா­சலின் நிர்வாக சபை தலை­வ­ருக்கும் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நீதி­வானின் உத்­த­ர­வுக்கு அமைய கல்­கிஸை மேல­திக நீதிவான் முன்­னி­லையில் கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி அஜித் தென்­னகோன் உள்­ளிட்ட குழு­வி­னரால் இவரது ஜனாஸா தோண்டி எடுக்­கப்­பட்­டது.

இந்நிலையில் குறித்த சட்ட வைத்­திய அதி­கா­ரியின் கட்­டுப்­பாட்டில் உள்ள எலும்பு மாதி­ரி­களை மூலக்கூறுகள் தொடர்­பான சோத­னை­க­ளுக்­காக புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் பிரிவின் சார்ஜன்ட ரத்னபிரிய ஊடாக ஜீன்டெக் நிறுவனத்துக்கு ஒப்படைக்குமாறும் நீதிவான் நிஸாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளமையும் சுட்டிக் காட்டத்தக்கது.