மக்காவில் யாத்திரிகள் தங்கியிருந்த ஹோட்டலில் தீ!!

861

fire-hits-Makkah-hotelசவூதி அரே­பிய நக­ரான மக்­கா­வி­லுள்ள ஹோட்ட­லொன்றில் வியா­ழக்­கி­ழமை தீ ஏற்­பட்டு பர­வி­ய­தை­ய­டுத்து, அங்­கி­ருந்து சுமார் 1,000 ஆசிய யாத்­தி­ரி­கர்கள் வெளி­யேற்­றப்­பட்­ட­துடன் இரு யாத்­தி­ரிகர்கள் காய­ம­டைந்த நிலையில் தீய­ணைப்புப் படை­வீ­ரர்­களால் மீட்­கப்­பட்­டுள்­ளனர்.

அந்த இரு யாத்­தி­ரி­கர்­களும் பெயர் வெளி­யி­டப்­ப­டாத குறிப்­பிட்ட 11 மாடிகளைக் கொண்ட ஹோட்­டலின் 8 ஆவது மாடியில் வெளி­யேற முடி­யாது சிக்­கி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த வருட ஹஜ் யாத்­தி­ரை­யை­யொட்டி மக்­காவை ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான யாத்­தி­ரி­கர்கள் ஏற்­க­னவே வந்­த­டைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அந்த ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்த யாத்திரி கர்கள் எந்­தெந்த நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் என்ற விபரம் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

கடந்த வாரம் மக்­காவின் பெரிய பள்­ளி­வா­சலில் பாரந்­தூக்கி உப­க­ர­ண­மொன்று உடைந்து விழுந்­ததில் குறைந்தது 111 பேர் பலியாகி 390 பேர் காயமடைந்துள்ள நிலையிலேயே இந்தத் தீ அனர்த்தம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.