வவுனியாவிற்கான விஜயம் ஒன்றினை இன்று (24.09.2015) காலை மேற்கொண்ட மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால சில்வா வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பயணிகள் பஸ் தரிப்பிடத்தினை பார்வையிட்டதுடன் அதன் குறை நிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
மிக விரைவாக திறந்த வைப்பதற்கான எற்பாடுகளையும் மேற்கொள்வதாக தெரிவித்தார். தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச்சபை பயணிகள் தரிப்பிடமும் ஒரே இடத்தில் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனையடுத்து வவுனியா புகையிரத நிலையத்தினையும் பார்வையிட்ட மத்திய அமைச்சர் புகையிரத நிலைய ஊழியர்களின் விடுதிகளையும் சிற்றுண்டிச்சாலை மலசல கூட வசதிகளையும் பார்வையிட்டதுடன் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
மத்திய பேரூந்து நிலையத்திற்கும் வருகை தந்து பயணிகளின் போக்குவரத்து தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். அதனையடுத்து வவுனியா இலங்கை போக்குவரத்துச் சாலைக்கும் சென்று குறைகளையும் கேட்டறிந்ததுடன் அவற்றை நிவர்த்தி செய்து தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.
-பிராந்திய செய்தியாளர்-






