மஹிந்த வழங்கிய வாக்குறுதிகளையே நாம் நிறைவேற்ற முயற்சிக்கிறோம்!!

519

laxman-720x480-720x480முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஐ.நா.வுக்கு வழங்­கிய உள்­ளக விசா­ரணை உறு­தி­மொ­ழி­யையே மைத்­திரி – ரணில் தலை­மை­யி­லான புதிய அரசு முன்­னெ­டுக்­கின்­றது.இதில் புதிய விடயம் எது­வு­மில்லை என சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரியெல்ல தெரி­வித்தார். ஜெனிவா பிரே­ரணை இலங்­கைக்கு சார்­பாக அமைந்­தி­ருப்­பது அர­சாங்­கத்­திற்கு கிடைத்த வெற்­றி­யாகும் என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக சபை முதல்­வரும் நெடுஞ்­சா­லைகள் மற்றும் பல்­க­லைக்­க­ழக கல்வி தொடர்­பான அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­விக்­கையில்,

ஜெனீ­வாவில் இலங்கை தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை பேரவை முன்­வைத்த அறிக்­கையில் புலிகள் மீது குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வேளை இலங்கை தரப்பில் அரச தலை­வர்­க­ளி­னதோ, படை அதி­கா­ரிகள் எவ­ரி­னதும் பெயர்கள் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

அத்­துடன் அமெ­ரிக்கா முன்­வைத்த பிரே­ரணை வரை­பிலும் இலங்­கைக்கு எதி­ராக எவ்­வி­த­மான கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

அது­மட்­டு­மல்­லாது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நல்­லாட்­சியை வர­வேற்­றுள்­ள­தோடு, முன்­னெ­டுக்­கப்­படும் தேசிய நல்­லி­ணக்க நட­வ­டிக்­கை­க­ளையும் ஆத­ரித்­துள்­ளன.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் ஐ.நா. செய­லாளர் நாயகம் பான்­ கீன் மூன் இலங்கை வந்தார். இதன்­போது அப்­போ­தைய ஜனாதி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இறுதி கட்ட யுத்தம் தொடர்­பாக சர்­வ­தேச தரத்­தி­லான உள்­ளக விசா­ரணை நடத்­தப்­ப­டு­மென ஐ.நா. செய­லாளர் நாய­கத்­திற்கு எழுத்து மூலம் உறு­தி­மொழி வழங்­கினார். அது மட்­டு­மில்­லாது ஐ.நா. செய­லாளர் நாய­கத்­துடன் இணைந்து கூட்­ட­றிக்­கையும் வெளி­யிட்டார்.

ஆனால் இந்த உறுதி மொழிக்­க­மைய மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளக விசா­ர­ணையை நடத்­த­வில்லை. எனவே தான் ஐ.நா. சபை சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்கு வலி­யு­றுத்த ஆரம்­பித்­துள்­ளது.

இதன் பின்னர் ஜனா­தி­பதி மைத்­திரி பிர­தமர் ரணில் தலை­மை­யி­லான ஆட்சி ஏற்­பட்­டது. இன்­றைய அர­சாங்கம் புதி­தகா எத­னையும் மேற்­கொள்­ள­வில்லை. மஹிந்­தவின் உறுதி மொழி­யைத்­தான நிறை­வேற்­று­கின்­றது.

அத்­துடன் நாட்டை சர்­வ­தேச விசா­ரணை பொறி­யி­லி­ருந்து புதிய அரசு பாது­காத்­துள்­ளது. எனவே தேச தரத்­திற்­க­மைய உள்­ளக விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இலங்­கையில் நீதித்­துறை, சட்­டத்­து­றைக்­கேற்­பவே அனைத்தும் நடைபெறும். எனவே சர்வதேச விசாரணை இடம்பெறாது. முழுமையாக இலங்கையின் சட்டத்துறைக்கமைவாகவே அனைத்தும் முன்னெடுக்கப்படும். புதிய அரசின் நடவடிக்கைகளை நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது என்றார்.