பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் சமிந்த வாஸ், ஜோர்டன் கிரினிஜ் உள்ளிட்ட பலர் பயிற்சியாளர்களாக இணைய உள்ளனர்.
பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது.இதில் இலங்கையின் முன் னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ், மேற்கிந்திய தீவுகளின் ஜோர்டன் கிரினிஜ், இந்தியாவின் முன்னாள் சகலதுறை வீரர் ரொபின் சிங் உட்பட 15 பயிற்சியாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இது பற்றி பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியின் தலைவர் நஜம் சேத்தி கூறுகையில்,15 பயிற்சியாளர்கள் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில பயிற்சியாளர்களை ஒப்பந்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும், வெளிநாட்டு வீரர்கள் மற் றும் பயிற்சியாளர்களுடன் இணையும் போது உள் ளூர் வீரர்களின் விளையாட்டுத் திறனும் அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.





