சீன நகரொன்றில் வியாழக்கிழமை புதிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.17 பொதி குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 7 பேர் பலியாகி 51 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்த சம்பவம் இடம்பெற்றமைக்கு மறுநாள் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
மேற்படி இரு வெடிப்பு சம்பவங்களாலும் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த புதிய வெடிப்பு சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாக அறிக்கையிடப்படவில்லை.
முதல் நாள் புதன்கிழமை தென் மேற்கு குவாங்ஸி மாகாணத்தில் உள்ள குடியிருப்புக் கட்டடங்க ளில் பொதிக் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றிருந்தன. இந்தக் குண்டு வெடிப்புகளில் சிக்கி அந்த 6 மாடிக் குடியிருப்புக் கட்டடம் சேதமடைந்துள்ளது.
அன்றைய தினம் சிறைச்சாலை, புகையி ரத நிலையம், அரசாங்க அலுவலகம் மற்றும் மருத்துவமனை என்பவற்றிலும் பொதிக் குண்டு கள் வெடித்துள்ளன.
அந்தப் பொதிக் குண்டுகள் தபால் மூலம் அனுப்பப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மேற்படி சம்பவத்துடன் தொடர்புபட்ட 33 வயது நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தத் தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தகவல் எது வும் வெளியிடப்படவில்லை.