இந்து சமுத்திர பிராந்தியத்தின் அமைதியை காப்பது எமது கடமை- ரணிலிடம் ஜப்பான் பிரதமர் உறுதி!!

484

ranil wikramasige

இந்து சமுத்­தி­ரத்தின் சமா­தா­னத்தை பாது­காப்­ப­தற்கு ஜப்பான் அர­சாங்கம் எந்த சந்­தர்ப்­பத்­திலும் உறு­து­ணை­யாக இருந்து செயற்­படும் என ஜப்பான் பிர­தமர் சின்சிரோ அபே தெரி­வித்தார்.

1952 ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன ஜப்­பா­னுக்கு ஆத­ர­வாக செயற்­பட்டு கருத்து தெரி­வித்­த­மையை எமது மக்கள் எந்த சந்­தர்ப்­பத்­திலும் மறக்க மாட்­டார்கள் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இலங்கை அர­சாங்­கத்தின் புதிய கல்வி துறை சார்ந்த பய­ணத்­திற்கு ஜப்பான் முழு­மை­யான ஒத்­து­ழைப்­பினை வழங்கும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.ஐந்து நாள் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு ஐப்பான் சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்வை நேற்று கியுத்தோ நகர சர்­வ­தேச மாநாட்டு கேந்­திர நிலை­யத்தில் வைத்து சந்­தித்த போதே ஐப்பான் பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அங்கு அவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் மேலும் கருத்து பரி­மா­று­கையில்,

இலங்­கைக்கு முத­லா­வது சுற்­றுலா மேற்­கொண்ட ஐப்­பா­னியர் எனது பாட்­ட­னா­ராவார். அந்த உரிமையை மைய­மாக கொண்டு இலங்­கை­யுடன் நட்­பு­ற­வினை தொடர்ந்தும் செயற்­ப­டுத்த எனது அர­சாங்கம் எதிர்­பார்­துள்­ளது. தென் ஆசிய நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இலங்கை ஆசிய வல­யத்தில் வளர்ச்­சியின் கேந்­தி­ர­மாக அமையும் என்று எதிர்­பார்­கின்றேன்.

இதன்­போது தொழில்­நுட்பம்இ பொரு­ளா­தாரம் மற்றும் பாது­காப்பு துறை­களில் அதி­க­ளவில் கவனம் செலுத்­தப்­படும். 1952 ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்­தன ஐப்­பா­னுக்கு ஆத­ர­வாக செயற்­பட்டு கருத்து தெரி­வித்­த­மையை எமது மக்கள் எந்த சந்­தர்ப்­பத்­திலும் மறக்க மாட்­டார்கள்.

இந்த உத­வியை கருத்திற் கொண்டு இந்து சமூத்­தி­ரத்தின் சமா­தா­னத்தை பாது­காப்­ப­தற்கு ஐப்பான் அர­சாங்கம் எந்த சந்­தர்ப்­பத்­திலும் உறு­து­ணை­யாக இருந்து செயற்படும். மேலும் இலங்கை அரசாங்கத்தின் புதிய கல்வி துறை சார்ந்த பயணத்திற்கு ஐப்பான் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.