2 மாதத்தில் இந்­திய கிரிக்கெட் சபையை சுத்தம் செய்வேன் : ஷசாங் மனோகர்!!

686

shashank_manohar-

இரண்டு மாதத்தில் இந்­திய கிரிக் கெட் சபையை சுத்தம் செய்வேன் என்று புதிய தலை­வ­ராக தெரிவுசெய்யப்பட்ட ஷசாங் மனோகர் தெரி­வித்­துள்ளார்.இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் தலை­வ­ராக இருந்த டால்­மியா கடந்த 20ஆம் திகதி மர­ண­ம­டைந்தார். இதை­தொ­டர்ந்து கிரிக்கெட் சபை யின் புதிய தலை­வரை தேர்ந்து எடுப்ப­தற்­காக சிறப்பு பொதுக்­குழு கூட்டம் ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்­தது.

இந்த கூட்­டத்தில் இந்­திய கிரிக்கெட் சபையின் புதிய தலை­வ­ராக ஷசாங் மனோகர் ஒரு­ம­ன­தாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். நாக்­பூரை சேர்ந்த ஷசாங் மனோகர் தற்­போது இரண்டா­வது முறை­யாக கிரிக்கெட் சபை தலை­ வ­ரா­கிறார்.

இதற்கு முன்­ன­தாக, 2008ஆம் ஆண்­டி­லி­ருந்து 2011-ஆம் ஆண்டு வரை அவர் தலை­வ­ராக பணி­யாற்­றி­யுள்ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.பத­வி­யேற்ற பிறகு செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய மனோகர் “ என்­னு­டைய முதல் நட­வ­டிக்கை கிரிக்கெட் சபையின் மீதுள்ள தவ­றான பிம்­பத்தை மாற்றி, ரசி­கர்­க­ளிடம் மீண்டும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வது தான். என்­னு­டைய திட்­டங்­களை அமுல்­ப­டுத்தி கிரிக்கெட் சபையை தூய்­மைப்­ப­டுத்த இரண்டு மாதம் அவ­காசம் கேட்டுள்ளேன். இரண்டு மாதத்திற்கு பிறகு எந்த கேள்விக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.