மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று பாலஸ்தீன் சென்றடைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல் அவிவ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். விமான நிலையத்திலிருந்து பாலஸ்தீனத்தின் தலைநகரான ரமல்லா வந்தடைந்தார். பாலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆவார்.
அங்கு நடந்த விழா ஒன்றில் அந்நாட்டு அதிபர் முகமது அப்பாசுடன் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது ரமல்லாவில் உள்ள சாலை மற்றும் ரவுண்டானாவிற்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது. பாலஸ்தீனிய மொழியில் சாலைக்கு ஷரியா-இ-அல்-ஹிந்த் என்றும் ரவுண்டானாவிற்கு மிடன்-இ-அல்-ஹிந்த் என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்த விழாவில் திரளான பாலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பாலஸ்தீன அதிகாரி ஒருவர் இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று குறிப்பிட்டார்.