இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!!

653

Ind

இந்­திய – தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற இரண்­டா­வது ஒருநாள் போட்­டியில் 22 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்­றது இந்­தியா.

இப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இந்­தியா முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்மானித்தது. அதன்­படி ரோஹித் ஷர்­மாவும் தவானும் தொடக்க வீரர்­க­ளாக கள­மி­றங்­கி­னார்கள்.

கடந்த போட்­டியில் சிறப்­பாக விளை­யா­டிய ரோஹித், இந்த ஆட்­டத்தில் 3 ஓட்­டங்­க­ளுடன் ஆட்டமிழந்தார். தவான் 21 ஓட்­டங்­களுடன் வெளி­யே­றினார். அடுத்து கள­மி­றங்­கிய தோனி, ரஹானே­வுடன் இணைந்து அணியின் ஓட்ட எண்­ணிக்­கை யை உயர்த்த போரா­டினார். ரஹானே 51 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்தார்.



தோனி மட்­டுமே நிலைத்து விளை­யாடி ஓட்­டங்­களை சேக­ரித்துக் கொண்­டி­ருந்தார். மற்­ற­வர்கள் வரு­வதும் போவ­து­மாக இருந்­தனர். இறு­தியில் இந்­திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கள் இழப்­பிற்கு, 247 ஓட்­டங்­களைப் பெற்­றது. தோனி 92 ஓட்­டங்­களைப் பெற்றார்.

இதை­ய­டுத்து, 248 ஓட்­டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்­கோடு கள­மி­றங்­கிய தென்­னா­பி­ரிக்க அணி போட்­டியின் முடிவில் அனைத்து விக்­கெட்­டு­க­ளையும் இழந்துஇ 225 ஓட்­டங்­களை எடுத்து தோல்வி அடைந்­தது.

தென்­னா­பி­ரிக்­காவின் தொடக்க ஆட்­ட­க்கா­ரர்­க­ளாக அம்­லாவும், டி கொக் கும் கள­மி­றங்­கி­னார்கள். இரு­வரும் சிறப்பாக ஆடி ஓட்­டங்­களைக் குவித்தார்கள். இதனால் தோனி சுழற்­பந்து வீச அழைத்தார். அதற்கு உட­னடி பலன் கிடைத்­தது. டி கொக்கும், அம்லாவும் அடுத்­த­டுத்து ஆட்டமிழந்தனர்.

இதனை அடுத்து வந்த டு பிள­சிஸும், டுமி­னியும் அணியை சரிவில் இருந்து மீட்கப்போராடினார்கள். ஆனால் அவர்கள் இரு­வ­ரையும் அஸ்கார் படேல் வெளி­யேற்­றினார்.

இதனை அடுத்து கள­மி­றங்­கிய டி வில்­லி­யர்ஸை 19 ஓட்­டங்க­ளுடன் வெளி­யேறினார். சிறப்­பாக ஆடி­வந்த பெர்­காடின், ஆட்­ட­மி­ழக்க, அந்த அணியின் தோல்வி உறு­தி­யா­னது. இறுதியில் இந்தியா 22ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.