இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது இந்தியா.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி ரோஹித் ஷர்மாவும் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.
கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித், இந்த ஆட்டத்தில் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தவான் 21 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தோனி, ரஹானேவுடன் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை யை உயர்த்த போராடினார். ரஹானே 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
தோனி மட்டுமே நிலைத்து விளையாடி ஓட்டங்களை சேகரித்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இறுதியில் இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு, 247 ஓட்டங்களைப் பெற்றது. தோனி 92 ஓட்டங்களைப் பெற்றார்.
இதையடுத்து, 248 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி போட்டியின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துஇ 225 ஓட்டங்களை எடுத்து தோல்வி அடைந்தது.
தென்னாபிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அம்லாவும், டி கொக் கும் களமிறங்கினார்கள். இருவரும் சிறப்பாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார்கள். இதனால் தோனி சுழற்பந்து வீச அழைத்தார். அதற்கு உடனடி பலன் கிடைத்தது. டி கொக்கும், அம்லாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனை அடுத்து வந்த டு பிளசிஸும், டுமினியும் அணியை சரிவில் இருந்து மீட்கப்போராடினார்கள். ஆனால் அவர்கள் இருவரையும் அஸ்கார் படேல் வெளியேற்றினார்.
இதனை அடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸை 19 ஓட்டங்களுடன் வெளியேறினார். சிறப்பாக ஆடிவந்த பெர்காடின், ஆட்டமிழக்க, அந்த அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் இந்தியா 22ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.