கடலரிப்பு பிரதேசங்களில் நீராடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்!!

456

2012 - 1காத்­தான்­குடி கடற்­க­ரையில் கட­ல­ரிப்பு ஏற்­பட்­டுள்ள கடல் பிர­தே­சங்­களில் நீரா­டு­வதை தவிர்த்து கொள்­ளு­மாறு கரை­யோரம் பேணல் மற்றும் கரை­யோர வள முகா­மைத்­துவ திணைக்­க­ளத்தின் காத்­தான்­குடி பிர­தே­சத்­திற்­கான அதி­காரி ஜே.மெக்கில் தெரிவித்தார்.

காத்­தான்­குடி ஏத்­துக்கால் கடற்­க­ரையில் கடந்த ஒரு­மா­த­மாக இடம் பெற்­று­வந்த கட­ல­ரிப்பு தற்­போது ஓர­ளவு குறைந்­துள்ள நிலையில் இப்­ப­கு­தி­யி­லுள்ள கடலில் நீரா­டு­வதை முற்­றாக தவிர்த்து கொள்­ளு­மாறு அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்­பாக உள்­ளூர்­வா­சிகள் மற்றும் சுற்­று­லாத்­துறை­யினர் கட­ல­ரிப்பு ஏற்­பட்­டுள்ள இந்­தப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள கடலில் நீரா­டு­வதை முற்­றாக தவிர்த்து கொள்­ளு­மாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்­தப்­பி­ர­தே­சத்தில் ஏற்­பட்ட கட­ல­ரிப்­பினால் இது­வரை சுமார் 30 அடிப்­பி­ர­தேசம் கட­லுக்குள் சென்று விட்­டது. அத்­தோடு இங்கு கரை­யோரம் கட்­டப்­பட்­டி­ருந்த மீனவர் தங்­கு­மி­டக்­கட்­ட­டத்தின் மல சல கூட கட்­டடத்தின் அத்­தி­வாரக் கட்ட­டமும் இடிந்து விழுந்­துள்­ளது.



இந்த கட­ல­ரிப்பை தடுப்­ப­தற்­கான முதல் நட­வ­டிக்­கை­யாக மண் மூடைகள் கட்­டப்­பட்டு கட­ல­ரிப்பு ஏற்­பட்ட இந்த இடங்­களில் போடப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

இந்த கட­ல­ரிப்பு நிலை­மை­களை அடிக்கடி பார்வையிட்டு எமது திணைக்கள மேலதிகாரிகளுக்கும் காத்தான்குடி பிரதேச செயலாளருக்கும் அடிக்கடி அறிக்கையிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.