சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தையொட்டி வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று (15.10.2015) வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் ஏராளமான பாடசாலை சிறார்களும் முதியவர்களும் கலந்துகொண்டனர் .மேற்படி நிகழவில் பலூன் ஊதி உடைத்தல் பழம் பொறுக்குதல் சங்கீத கதிரை கிடுகு பின்னுதல் முயல் மற்றும் தவளை பாச்சல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது .
வவுனியா வடக்கு செய்தியாளர் நிரேஷ்