வெளிநாடுகளின் வங்கிகளில் பல பில்லியன் ரூபா கணக்குகள்- விசாரணைகளின் முடிவுகளில் திடுக்கிடும் தகவல் வரும்!!

397

Rajitha-415x260இலங்­கையின் முன்னாள் ஆட்­சி­யா­ளர் களின் உற­வி­னர்­களின் பெயர்­களில் வெளி­நா­டு­களின் வங்­கி­களில் பல பில்­லியன் ரூபா கணக்குகள் உள்­ளன. அவற்றை முடக்கி அந்த பணத்தை இலங்­கைக்கு கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணை நடத்தப்படு கின்றது. அதன் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்றும் அவர் கூறினார். எவன்கார்ட் நிறு­வனம் தொடர்பில் விரை­வான சட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள் ளார். அதன்­படி விசா­ர­ணைகள் துரித கதியில் முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.