புதிய முறையில் உள்ளூராட்சித் தேர்தல்!!

656

ballot-box-உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தல்கள் புதிய முறை­மையில் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெறும். இதற்­கான ஏற்­பா­டுகள் மேற் ­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. அதா­வது 70 வீத தொகுதி வாரி மற்றும் 30 வீத விகி­தா­சார முறை­மை­யைக்­கொண்ட புதிய தேர்தல் முறையில் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் நடை­பெறும் என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யா ற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கை யில்,

உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தல்கள் அடுத்­த­வ­ருடம் மார்ச் மாதம் நடை­பெறும். இதற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலை புதிய தேர்தல் முறை­மையில் நடத்­தவே எதி ர்­பார்க்­கின்றோம். அதனை தாம­தப்­ப­டுத்த நாங்கள் விரும்­ப­வில்லை.

அதா­வது 70 வீத தொகுதி வாரி மற்றும் 30 வீத விகி­தா­சார முறை­மை­யைக்­கொண்ட புதிய தேர்தல் முறையில் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் நடை­பெறும்.ஆனால் கடந்த காலங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட எல்லை மீள் நிர்­ணயம் தொட ர்பில் சிக்­கல்கள் உள்­ளன. கடந்த காலங்­களில் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு தேவை­யான வகையில் எல்லை மீள் நிர்­ண­யங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன.



அவற்றை விரைவில் மறு­சீ­ர­மைத்து எதிர் ­வரும் மார்ச் மாத­ம­ளவில் தேர்தலை நடத்து வதே எமது நோக்கமாகும். அதற்கான ஏற்பா டுகளை மேற்கொண்டுவருகின்றோம். தேவை எனின் இரண்டு மாதங்கள் அளவில் தாமதம் ஏற்படலாம் என்றார்.