மஹரகமை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது 5 பெண்கள் கைது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிலியந்தலை, பதுளை,வெயங்கொட மற்றும் கலேவேல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொழும்பு உட்பட அதன் புற நகர் பகுதிகளில் ஆயுர்வேத நிலையங்கள் என்ற பெயரில் இவ்வாறான விடுதிகள் இயங்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.