கடந்த 19.10.2015 வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்திற்கு அலுவலகத் தளபாடம் வழங்கிவைக்கப்பட்டது.
இன் நிகழ்வு பூந்தோட்டம் மகாவித்தியலயத்தில் நடைபெற்றபோது வடமாகாண மாகாணசபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்கள் அலுவலகத் தளபாடத்தை அதிபர் திருமதி.கிருஸ்ணவேணி நந்தபாலன் அவர்களிடம் கையளித்தார்.
இன் நிகழ்வில் பாடசாலையின் உப அதிபர் திருமதி.மோகனதஸ் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டர்கள். தொடர்ந்து இவ் வைபவத்தில் பாடசாலை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் இடம் பெற்றது.