வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் இன்று (22.10.2015) விஜயதசமி விசேட பூசை நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.தர்மரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து பெரும் அளவிலான பிரசாதங்களை தயார் செய்து மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
மேலும் விசேட பூசை வழிபாடுகள், கலை நிகழ்வுகள், முன்பள்ளி மாணவர்களுக்கு ஏடு தொடக்குதல் நிகழ்வு என்பனவும் நடைபெற்றது.
அத்துடன் மத்திய கல்வியமைச்சினால் ஆயிரம் பாடசாலைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட அதி நவீன இரண்டு மில்லியன் பெறுமதியான மலசல கூடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும் இடம்பெற்றது.