வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கம் கந்தசஸ்டியை முன்னிட்டு திருப்புகழ் இன்னிசைக் கச்சேரி ஒன்றை நேற்று சனிக்கிழமை நடத்தியது.
திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சியை இசைக்குயில் திருமதி வதனி சிறிதரன் மற்றும் சென்னையை சேர்ந்த கலாநிதி வி.சுதர்சன் ஆகியோரின் மாணவன், நயினை ப.சிவமைந்தன் வழங்கியிருந்தார்.
இதன் போது 75 வயதை கடந்தவர்களுக்கு விசேட கௌரவமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் விசேடமாக வவுனியாவில் 105 வயதைக் கடந்திருக்கும் வே.சதாசிவம் ஐயா விழாவில் கலந்து கொண்ட அனைவராலும் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக சமூக சஞ்சீவி சி.ஏ.ராமசுவாமி, தமிழ் மணி அகளங்கன், மற்றும் இசை ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






