வவுனியாவிலிருந்து சட்டக் கல்லூரிக்கு தெரிவான புவனேந்திரராஜா ஜனந்தன்!!

1619

Jananthan

2015ம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி அனுமதிக்கான பரீட்சை கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்று பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியானது.

வெளியான முடிவுகளின்படி அகில இலங்கை ரீதியில் 213 மாணவர்கள் சட்டக் கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் தமிழ் மொழியில் 18 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களில் 8 மாணவர்கள் தமிழ் பேசும் முஸ்லிம் மாணவர்களாவர்.

தமிழ் மாணவர்களில் யாழ்ப்பாணத்திலிருந்து மூவரும், மட்டக்களப்பிலிருந்து இருவரும், கொழும்பிலிருந்து இருவரும், வவுனியா, மன்னார், கண்டி ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா ஒருவரும் சட்டக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்குக் தோற்றுகின்றபோதும் 200-250 மாணவர்களே சட்டக் கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்டு வருகின்றனர்.

இப் பரீட்சைக்கு குறைந்தளவிலான தமிழ் மாணவர்களே தோற்றிவருவதுடன் மிகக் குறைந்தளவிலான மாணவர்களே சட்டக் கல்லூரிக்கான அனுமதியைப் பெற்றுவருகின்றனர்.

வவுனியாவிலிருந்து இம்முறை ஜனந்தன் புவனேந்திரராஜா தெரிவுசெய்யப் பட்டுள்ளார். 122 புள்ளிகளைப் பெற்ற இவர் தெரிவுசெய்யப்பட்ட 213 மாணவர்களுள் 99ம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மற்றும் வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவரான ஜனந்தன் தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தெரிவானவர்களின் முழுமையான பட்டியல்