புறக்கோட்டையில் பட்டப்பகலில் 12 இலட்சம் ரூபா பணம் கொள்ளை !!

522

robbery-bid-foiledபுறக்கோட்டை–கதி­ரேசன் வீதிப் பகு­தியில் பட்­டப்­ப­கலில் நப­ரொ­ரு­வரின் கழுத்தை வெட்­டி­விட்டு வங்­கியில் வைப்­பி­லிட எடுத்துச்செல்­லப்­பட்ட 12 இலட்சம் ரூபா பணம் அடை­யாளம் தெரி­யாத நபர்­க­ளினால் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது.

இச்­சம்பவம் நேற்று பிற்­பகல் 1.00 மணிக்கும் 1.30 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் சம்­ப­வத்தில் காய­ம­டைந்த அப்­பி­ர­தே­சத்தின் பால் மா களஞ்­சியம் ஒன்றின் பரா­ம­ரிப்பு நிதி சேக­ரிப்­பாளரான லெஸ்லி குணவர்த்தன (வயது 58) கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இந்த சம்­பவம் குறித்து மேலும் அறிய முடி­வ­தா­வது,

புறக்கோட்டை–கதி­ரேசன் வீதியில் உள்ள பிர­பல பால் மா களஞ்சி­ய­சாலை ஒன்றில் நிதிசேக­ரிப்­பா­ள­ராகக் கட­மை­யாற்றும் நபர் நேற்றும் வழமை போன்று நிதி சேக­ரிக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ளார். நேற்­றைய தினம் குறித்த வீதியில் உள்ள பல கடை­களில் நிதியை சேக­ரித்த அவர் சேக­ரிக்­கப்­பட்ட சுமார் 12 இலட்சம் ரூபாவை வங்­கியில் வைப்­பி­லிட எடுத்துச் சென்­றுள்ளார்.

இதன் போது அவரை பின்தொடர்ந்து வந்­துள்ள கொள்­ளையன் ஒருவன் அந் நபரின் கைகளில் இருந்த பணத்தை பறித்துச் செல்ல முற்­பட்­டுள்ளான். கொள்­ளை­ய­னி­ட­மி­ருந்து பணத்தை காக்க குறித்த நபர் போரா­டவே கொள்­ளையன் உடன் வைத்­தி­ருந்த கத்­தியை எடுத்து குறித்த நபரின் கழுத்தை வெட்­டி­யுள்ளான். பின்னர் பணத்தை எடுத்­துக்­கொன்டு அவன் தப்பிச் சென்­றுள்ளான்.

சம்ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்த குறித்த நபர் உட­ன­டி­யாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்டு செல்­லப்­பட்ட நிலையில் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

சம்ப­வத்­தை­ய­டுத்து ஸ்தலத்திற்கு விரைந்த புறக்­கோட்டை பொலிஸார், மேல் மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர, கொழும்­புக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு மத்திய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சம்பிக்க சிறிவர்தன ஆகியோரின் மேற்பார்வையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.