ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் இலக்கு இலங்கையின் பக்கமும் திரும்பலாம்- கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை!!

588

bbs-gnana-saara-therar-655x360தற்­போது பிரான்ஸில் நடந்­து­வரும் ஐ.எஸ். இயக்­கத்தின் தொடர்­ச்சி­யான பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் விரைவில் இலங்­கையில் கொழும்பில் அல்­லது கிழக்கு மாகா­ணத்தில் உள்ள பிர­தே­சங்­களில் இடம் பெறலாம் என்று பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

மதத்­தீ­வி­ர­வாத கற்கை நெறிகள் முஸ்லிம் மக்­க­ளுக்கு போதிக்­கப்­பட்டு அவர்­களை தீவி­ர­வா­தி­க­ளாக்­குவதன் பின் விளை­வு­களை முஸ்லிம் சமூகம் விரைவில் எதிர்­கொள்ள நேரிடும் எனவும் குர்­ஆனில் உள்ள இஸ்லாம் சார்ந்த அடிப்படை கோட்­பா­டுகள் தற்­பே­ாதைய நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மற்­றது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்பு பொது­ப­ல­சேனா அலு­வ­ல­கத்தில் இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்பின் இலக்கு தற்­போது பிரான்­சிற்கு அச்­சு­றுத்­த­லா­கி­யுள்­ளது. இந்­நி­லையில் விரைவில் இந்த அமைப்பின் இலக்கு இலங்கை பக்கம் திரும்­பலாம் என்ற அபாயம் நில­வு­கின்­றது. தற்­போதைய அரசாங்­கத்தின் புதிய விசா வழங்கும் திட்­டமும் அவர்கள் நாட்­டிற்குள் நுழைய சாத­க­மான கார­ணி­யா­க­வுள்­ளன.

தற்­போது கிழக்கு மாகா­ணத்தின் சில பகு­திகள்இ குரு­ணாகல் பர­கா­தெ­னிய பிர­தேசம், மாவ­னெல்லை மாளி­கா­வத்தை உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் மத­ரசா என்ற போர்­வையில் பல்­வேறு இஸ்­லா­மிய அமைப்­புக்கள் மத தீவி­ர­வா­தத்தை பரப்பி வரு­கின்­றன. இது எமது நாட்­டிற்கு எதிர்­கா­லத்­திற்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யலாம் ஐ.எஸ். அமைப்­பினை விடவும் கொடூ­ர­மான அமைப்­புக்கள் உரு­வாகும் சாத்­தியம் உள்­ளன.

உலகில் இடம்பெறும் கடும் போக்கு வாதி­களின் தாக்­கு­தல்­களை நாம் விமர்­சிக்­கின்­ற­பொ­ழுது எமக்கு பலர் இன­வா­தி­யாக முத்­திரை குத்­து­கின்­றனர். இது தொடர்பில் சமூக பொறுப்­புடன் செயற்­படும் முஸ்லிம் தலை­வர்­களும் மௌனம் சாதித்து வரு­கின்­றனர்.

பொது­வாக எல்லா சமூ­கத்­திலும் கடும்­போக்­கு­வாதம் பேசப்­ப­டு­வது இயல்பு. ஆனால் பொறுப்­பு­ணர்வு மிக்க மதத்­த­லை­வர்கள் தொடர்ந்தும் மௌனம் சாதிக்கும் பட்­சத்தில் அவர்­களின் அமைதி போக்கு எதிர்­கா­லத்தில் முஸ்லிம் சமூகத்­திற்கு விடுக்­கப்­படும் அச்­சு­றுத்­த­லாக அமைந்­து­வி­டக்­கூடும்.

இந்­நி­லையில் தற்­கா­லத்தில் ஐரோப்­பி­ய­நா­டு­களில் வாழும் இளை­ஞர்கள் பலர் ஐ.எஸ் இயக்­கத்தின் பக்கம் ஈர்­க்கப்­ப­டு­கின்­றனர். இவர்கள் தாம் தீவி­ர­வாத அமைப்பில் உள்ளோம் என தமது பெற்­றோ­ருக்கும் அறி­விப்­ப­தில்லை. இவர்கள் அல்லாஹ் என்று இறை­வனின் பெயரை கூறி­விட்டு எந்த தவ­றையும் துணிந்து செய்­கின்­றனர். இந்­நி­லையில் மாற்றம் ஏற்­பட வேண்­டு­மாயின் முஸ்லிம் சமூ­கத்தில் பொறுப்­பு­ணர்வு உள்­ள­வர்கள் அமைதி களை­ய­வேண்­டி­யது அவ­சியம்.

அதோபோல் பிரான்ஸின் தலை­நகர் பாரிஸில் பிரான்­சியர் அல்­லாத வேறு இனத்­த­வர்­களே வாழ்ந்தனர். அதனால் ஐ.எஸ் இன் தாக்குதலில் அதிகம் அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். எனவே எதிர்காலத்திலும் இவ்வாறன தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில் ஐ.எஸ் இயக்கத்திற்கு மட்டுமல்லாது முஸ்லிம் சமூத்திற்கு இவ்வாறான நிலைக்கு முகம்கொடுக்க நேரிடும்.