திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கு தாரைவார்க்கும் அரசாங்கம் : பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண!!

616

Tissa-Vitharana-620x305திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அமெ­ரிக்­கா­வுக்கு தாரை­வார்த்து அங்கு அமெ­ரிக்க படை முகாம்­களை அமைப்­ப­தற்கு அரசு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இது நாட் டின் தேசிய பாது­காப்­பிற்கும் தெற்கா­சி­ யா­வுக்கும் பாது­காப்பு அச்­சு­றுத்­த­லாகும் என முன்னாள் அமைச்சரும் சம சமாஜக் கட்­சியின் தலை­வ­ரு­மான பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண எச்சரிக்கை விடுத்தார்.

உலக பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் சர்­வ­ தேச நாடுகள் இலங்­கையின் விட­யத்தில் தலை­யி­டு­வதைப் போன்று அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் அவர் தெரி­வித்தார்.

கொழும்பு பொர­ளையில் உள்ள என்.எம். பெரேரா நிலை­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற சோஷ­லிச மக்கள் முன்­ன­ணியின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­றும்­போதே பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

பயங்­க­ர­வா­திகள் பிரான்ஸில் நடத்­திய காட்­டு­மி­ராண்டித் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­வர்கள் தொடர்பில் எமது கவ­லை­யையும் அனு­தா­பத்­தையும் இத்­த­ரு­ணத்தில் தெரி­வித்துக் கொள்­கிறோம்.

இதே­வேளை, உலக பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு சர்­வ­தேசம் ஒன்­றி­ணைந்து போரா­டப்­போ­வதை வர­வேற்­கின்றோம்.இலங்­கையில் இதே­போன்­ற­தொரு பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கா­கவே எமது படை­யினர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர்.

ஆனால் இன்று உலகப் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக போராடத் தயா­ராகும் சர்­வ­தேசம் எமது நாட்டில் பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்­டமை தொடர்பில் எமது படை­யினர் மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றது.எமது நாட்டுப் பிரச்­சி­னையில் தலை­யிட்­டது போன்று சர்வதேச ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கும் போது அவற்றில் தலை­யிட வேண்­டா­மென்று கேட்டுக் கொள்­கிறோம்.

இலங்கை அர­சாங்கம் இன்று முழுக்க முழுக்க அமெ­ரிக்­காவின் சார்­புத்­தன்­மை­யா­ன­தாக கீழ்­ப­டிந்து உள்­ள­தென அந்­நாட்டின் உயர் இரா­ணுவ அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.அமெ­ரிக்கா தனது பாது­காப்பு தொடர்பில் கடல் வல­யத்­தி­னூ­டாக முன்­னெ­டுத்து வரும் பாது­காப்­பிற்­காக திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை கைப்­பற்றும் முயற்­சியை முன்­னெ­டுத்து வரு­கி­றது.

அர­சாங்­கமும் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அமெ­ரிக்­கா­வுக்கு தாரை­வார்ப்­ப­தற்கு தயா­ராக உள்­ள­தோடு திரு­கோ­ண­ம­லையில் அமெ­ரிக்கப் படை­யி­னரின் முகாம்­களை அமைப்­ப­தற்கும் அனு­மதி அளிக்க முன்­வந்­துள்­ளது.

இது பயங்­க­ர­மான நிலை­மை­யாகும். இவ்­வா­றான நிலை ஏற்­பட்டால் அது சீனாவுக்கும் ஆபத்தானதாக அமையும். அது மட்டுமல்லாது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாகும்.கடந்த ஆட்சிக் காலத்தில் இதற்கு நாம் அனுமதி வழங்கவில்லை என்றார்.