வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தில் 18.11.2015 அன்று மலையடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மாலை 2.00 மணியளவில் திருக்கல்யாண வைபவம் இடம்பெற்று விசேட பூஜையை தொடர்ந்து 4.30 மணியளவில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி (கலண்டர்) வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது.
முதல் பிரதியை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.வை. சிவசங்கரக்குருக்கள் வெளியிட ஆலய நிர்வாக சபையினர் பெற்றுக்கொண்டனர் தொடர்ந்து வவுனியாவின் பிரபல வர்த்தகர்கள் ஊர் முக்கியஸ்த்தர்கள் பொதுமக்கள் அடியவர்கள் ஆகியோர் ஏனைய பிரதியினை பெற்றுக்கொண்டனர்.
படங்கள் :சிவசங்கர்