
வவுனியா தோணிக்கலில் உள்ள லக்ஸ்சபான வீதியில் உள்ள வீட்டிலேயே இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது..
நேற்று இரவு (23.11.2015) வீட்டில் உள்ளவர்கள் உறங்கிய பின் ஜன்னல் வழியாக உள் நுழைந்து 130,000 ரூபா பணத்தினையும் 20,000 ரூபா பெறுமதியான நகையினையும் திருடி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.





