அடுத்துவரும் சில தினங்களுக்கு உலகம் இருளில் மூழ்குமா?

490

World

உலகம் அடுத்துவரும் சில தினங்களுக்கு இருளில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படும் செய்தி குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீடப் பேராசிரியர் சந்தன ஜயரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

அடுத்து வரும் சில தினங்களுக்கு உலகம் இருளில் இருக்கும் என்ற தகவல் இணைய தளங்களின் ஊடாகவே பரப்பப்படுகிறது. இதனை உறுதிப்படுத்துவதற்கு விஞ்ஞான பூர்வ ஆதாரங்கள் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இச் செய்தியைப் பரப்புவோர் தங்களது கூற்றுக்கு நாஸா நிறுவனத்தையும் துணைக்கு அழைத்துள்ளனர். இதனூடாக மக்களை நம்ப செய்ய முடியுமெனவும் அவர்கள் எதிர்பார்த்துள்ளனர் போலும் ஆனால் நாஸா நிறுவனம் இது தொடர்பாக எதுவித தகவலையும் உத்தியோக பூர்வமாக வெளியிடவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.