மட்டக்களப்பில் 10 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!(படங்கள்)

552

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலம்பாவெளி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பத்து வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மயிலம்பாவெளி பகுதி பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்ற மாணவனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

1 2 3 4 5