கடல்கொந்தளிப்பினால் அனலைதீவுக்கான அம்புலன்ஸ் படகு சரிந்து கவிழ்ந்தது!!

434

 
646e115a-f6f7-4ee2-a005-120e3c068ab4

கடல் கொந்­த­ளிப்பைத் தாக்குப்பிடிக்­க ­மு­டி­யாத நிலையில் அனலைதீவுக்­கான அம்­புலன்ஸ் படகு கடலில் கவிழ்ந்துள்ளது. குறி­காட்­டு­வானில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த வேளையிலேயே இப்படகு கடலில் சரிந்­துள்ள­து.படகின் கட்­டு­மா­னப்­பணிகள் உரியமுறையில் இடம்­பெ­ற­வில்லையா? பழு­த­டைந்து பாவ­னைக்கு உத­வாத ஒரு படகைத்தான் இவ்வாறு திருத்­தி­ய­மைத்து அம்புலன்ஸ் படகாக மாற்றி சேவையில் ஈடு­ப­டுத்­தி­னார்­களா- என பொது மக்கள் கேள்வி யெழுப்பியுள்ளனர்.

இது­வரை சேவையில் ஈடு­ப­டுத்­தப்­படாத நிலையில், துறை­மு­கப்­ப­கு­தியில் காணப்­பட்ட சிறிய அள­வி­லான கடல் கொந்­த­ளிப்­பையே தாக்­குப்­ பி­டிக்க முடி­யாமல் சரிந்து போன படகை நிமிர்த்தும் பணியில் நெடுந்­தீவு ப.நோ.கூ.சங்­கப் ­ப­டகு ஈடு­பட்டு வரு­கின்­றது. வடக்கு மாகாண சபையின் 6 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இப்படகு தயா-ரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.