
ஸ்ரீ லங்கன் தேசிய விமான சேவைக்கு உரிய கடைசி ஏ 340 விமானம் இன்று அதன் கடைசி பயணத்தை மேற்கொண்டது.அதனடிப்படையில் மதுரையில் இருந்து கடுநாயக்க விமான நிலையத்தை இன்று முற்பகல் 11.25 க்கு வந்தடைந்தது.
குறித்த ஏ 340 விமானம் , விமான சேவைக்கு பயன்படுத்தும் கடைசி விமானமாகும்.பிரான்ஸின் குறித்த விமானத்தை தயாரிக்கும் ஏர் பஸ் நிறுவனம் அதன் உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில் , குறித்த விமானத்தை , விமான சேவையில் இருந்து நிறுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
நான்கு இயந்திரங்கள் அடங்கிய அந்த விமானத்தில் 315 பேர் பயணிக்க முடியும் .அதற்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏ 330 -300 எயார் பஸ் விமானத்தில் இரண்டு இயந்திரங்கள் காணப்படுவதோடு , தொழிநுட்பத்திரனில் உயர் மட்டத்தில் காணப்படுகின்றது.ஏ 340 எயார் பஸ் விமானத்தை ஆசியாவிற்கு முதல் முதலாக அறிமுகப்படுத்தியது ஸ்ரீ லங்கன் விமான சேவையாகும்.





