கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே விழுந்த இரு நபர்கள் பலி!!

659

Dead

அநுராதபுரத்தில் கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் வேலைத்தளமொன்றில், மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து, கீழே விழுந்த இரு நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இடம் பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், குறித்த கட்டிடத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டவர்கள் என காவல் துறையினர் தெரிவித்தனர்.