இங்கிலாந்தின் குட்டி இளவரசரின் பாதுகாப்பிற்கு 50 பொலிஸ்!!

324

imgpress

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மகன் ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயியை ஆயுதம் ஏந்திய 50 பொலிசார் 24 மணிநேரமும் பாதுகாக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் அழகான ஆண் குழந்தையை கடந்த 22ம் திகதி பெற்றெடுத்தார்.

அந்த குழந்தைக்கு ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயி என்று பெயர் வைத்துள்ளனர். இந்தநிலையில் குழந்தை ஜோர்ஜை பாதுகாக்க 50 பொலிசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்தி ஜோர்ஜை பாதுகாக்கும் பணியில் ஈடுபடவிருக்கின்றனர். இளவரசர் ஜோர்ஜ் தனது பெற்றோருடன் 19வது நூற்றாண்டில் கட்டப்பட்ட அன்மர் ஹாலில் பெரும்பாலான நேரத்தை செலவிடவிருக்கிறார்.

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள பொலிசார் குட்டி இளவரசரை பாதுகாப்பதுடன் பிற பணிகளிலும் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.