வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார்.
வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நோக்கில் 43 இலட்சத்து 58 ஆயிரத்து 261 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.