
வெல்லம்பிட்டிய, 20 வீட்டுத் தோட்ட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு 11.45 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த குழுவொன்று இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவலின் அடிப்படையில் வெல்லம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





