உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்ட நிலையில், இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் மொத்த விற்பனை விலையில் மாற்றம் ஏற்படாது என புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ உருளைக்கிழங்கு தற்போது 80 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் பழனியாண்டி சுந்தரம் தெரிவித்தார்.
ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட விலைக்கே விற்பனை செய்வதாக சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டள்ளார்.
இந்நிலையில் எதிர்காலத்தில் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், அதன் விலையை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.