பசியினால் உயிரிழந்த மிருகங்களால் உலகின் மிக மோசாமான விலங்கு பூங்காவாக மாறி இருப்பதாய் ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
காசா பகுதியில் அமைந்துள்ள கான் யூனுஸ் விலங்கு பூங்காதான் தற்போது உலகின் மிக மோசமான பூங்காவாக காட்சி தருகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த பூங்காவை ஆயிரக்கணக்கான டொலர் முதலீடு செய்து பெரும் ஆர்வத்துடனும் திறந்துள்ளார் முகமது Awaida என்பவர்.
ஆனால் ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதலை துவங்கிய பின்னர் இந்த பூங்காவில் இருந்து பல மிருகங்கள் உயிரிழந்தன. இஸ்ரேல் படையினரின் தொடர் ரொக்கெட் தாக்குதல்களால் முகமது தமது பூங்காவில் வரமுடியாமல் போனது.
இதனால் கடுமையான பட்டிணியை அனுபவித்த மிருகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் உயிர் விட்டுள்ளது.
காசா பகுதியில் அமைந்துள்ள 5 பூங்காக்களில் கான் யூனுசும் ஒன்று. விலங்கு பூங்காக்களுக்காக பரிந்து பேசும் அரசு துறை கூட இல்லை.
இதுபோன்ற காரணங்களால் கான் யூனுஸ் பூங்கா ஆதரவின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்குள்ள மிருகங்கள் அனைத்தும் உறைந்த நிலையில் உள்ளன.
பசியால் உயிரிழந்த கொடிய மிருகங்கள் எல்லாம் ஆண்டுகள் பல கடந்த பின்னர் சிதிலமடைந்தும் உறைந்தும் காணப்படுகிறது.
தற்போது சிதிலமடைந்து காணப்படும் அந்த மிருகங்களை கெடாது பாதுகாக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார் முகமது.






