அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் ஹிலாரி தோல்வி!!

537

Hilary

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடைபெறுகிறது. ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், பெர்னி சாண்டர்ஸ் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

குடியரசு கட்சியில் கோடீசுவரர் டொனால்டு டிரம்ப் மற்றும் டெட் குரூஸ் இடையே கடும் போட்டி உள்ளது. தற்போது மாகாண ரீதியாக வேட்பாளர் போட்டி பிரசாரம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஓட்டெடுப்பில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் டெக்சாஸ், அர்கன்சாஸ், அலபாமா, டென்னிசே, ஜார்ஜியா, விர்ஜினியா ஆகிய 6 மாகாணங்களில் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் விர்ஜினியா, அலபாமா, மசாசூ செட்ஸ், டென்னிசே ஆகிய 4 மாகாணங்களில் வென்றார்.

இந்த நிலையில் நேற்று 5 மாகாணங்களில் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் குடியரசு கட்சியின் முன்னணி வேட்பாளராக திகழும் டொனால்டு டிரம்ப் கன்சாஸ், மெய்னே காகசஸ் ஆகிய 2 தொகுதிகளில் தோல்வியை தழுவினர். இங்கு இவரை எதிர்த்து போட்டியிடும் டெட் குரூஸ் வெற்றி பெற்றார்.

அதேபோன்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கன்சாஸ், நெப் ரஸ்கா ஆகிய மாகாணங்களில் ஹிலாரி கிளிண்டனின் எதிர்ப்பாளர் பெர்னி சாண்டர்சை வென்றார்.

இதற்கிடையே அடுத்து நடைபெறும் தேர்தல்களில் கென்ட் கசிகாசஸ், மற்றும் லூசியானாவில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் லீசியானாவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ஹிலாரி கிளிண்டன்– மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே தொடர்ந்து கடும் போட்டி நிலவுகிறது.