வறட்சியான காலநிலையால் நீர் மின்சார உற்பத்தி பாதிப்பு!!

686

Varatchi

நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மின்சார உற்பத்தி மொத்த மின்சார அலகுகளில் 25 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும் மின்சார உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையே இதற்கான காரணம் என இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குடிநீருக்கு மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் நாளாந்தம் 780 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படுவதாக மின்சார சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மகாவலி திட்டத்திற்கு உட்பட்ட நீர்த் தேக்கங்களின் நீர்மட்டமும் துரிதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், கொத்மலை நீர்த் தேக்கத்தில் நீர் மட்டம் 32 வீதமாகவும், விக்டோரியா நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 56 வீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மகாவலி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை காசல்ரீ, மவுசாகலை மற்றும் சமனலவெவ ஆகிய நீர்த் தேக்கங்களினதும் நீர்மட்டத்திலும் துரித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.