3 வருடங்களாக மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை சிக்கினார்!!

805

1 (26)

12 வயதான தனது மகளை மூன்று வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், 52 வயதான ஒருவரை, கைதுசெய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புத்தளம் – அட்டவில்லுவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனது தந்தையால் இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பில் குறித்த சிறுமி அயல் வீட்டுப் பெண்ணிடம் கூறியுள்ளதாகவும், இதனையடுத்து அந்தப் பெண் சிறுமியின் வகுப்பாசிரியரிடம் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. பின்னர் ஆசிரியர் இந்த விடயத்தை சிறுவர் பாதுகாப்பு அமைச்சுக்கு கூறியதை அடுத்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, செயற்பட்ட பொலிஸார் சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததன் பின்னர் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர். 2012ம் ஆண்டு தந்தை தன்னை முதன் முறையாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், இதன்போது தாய் தந்தையுடன் முரன்பட்ட நிலையில் வீட்டைவிட்டு வௌியேறியிருந்ததாகவும் சிறுமி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

பின்னர், தாய் தந்தையுடன் சமாதானம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்தார் எனக் குறிப்பிட்டுள்ள சிறுமி, எனினும் தாய் இரவில் உறங்கியதும், தன்னை தந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாகவும், இதனை வௌியே கூறினால் கொன்று விடுவதாக சந்தேகநபரான தந்தை மிரட்டியதாகவும் சிறுமி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.