நீரில் மூழ்கிய ஆலயம் வெளியே தெரிகிறது!!

531

mavusagalai_temple_3

மலையகத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியால் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 20 அடி வரை குறைவடைந்துள்ளது. இதனால் மவுசாகலை (பழைய நகர்) நீர்த்தேக்கத்தில் மூழ்கியிருந்த ஸ்ரீ சண்முகநாதர் ஆலயம் தற்போது வெளியே தெரிகிறது.வரட்சியான காலநிலை சென்று பழைய நிலைக்கு வந்தவுடன் மீண்டும் இந்த ஆலயம் நீரில் மூழ்கிவிடும்.

மலையகத்தில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளதால் நீர்த் தேக்கங்களில் போதியளவு நீரின்றி காணப்படுகின்றது.மஸ்கெலியா மவுசாகலை, நோட்டன், சுரேந்திரா, டிக்கோயா காசல்ரீ, கென்னியோன் ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் நாளுக்கு நாள் வற்றி வருவதால், மின்சார தட்டுப்பாடு ஏற்படலாமென பலரும் அஞ்சுகின்றமை குறிப்பிடத்தக்கது.