உலகின் மிகப்பெரிய விமானம் அவசரமாக கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம்!!

444

BANNER_DREAMS-TAKE-FLIGHT

அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம் அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான எயர்பஸ் A380 என்ற விமானம் டுபாயில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி சென்ற இவ்விமானத்தில் 502 பயணிகளும் 30 ஊழியர்களும் பயணித்துள்ளனர். இதில் பயணித்த 72 வயது நிரம்பிய ஆஸ்திரேலியா பெண்ணொருவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.குறித்த பெண் நீர்கொழும்பில் உள்ள தனியார் வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .