பாகிஸ்தானை விட அன்பு அதிகம் இந்தியாவிலேயே கிடைக்கும் : அப்ரிடி!!

468

Afridi

6வது 20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மார்ச் 15ம் திகதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கொல்கத்தாவில் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை காட்டி பாகிஸ்தான் அணி இந்தியா வருவதை தாமதித்து வந்தது. இந்திய உள்துறை அமைச்சகம் பாகிஸ்தான் அணிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து நேற்று மாலை கொல்கத்தா வந்தடைந்தது பாகிஸ்தான்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அணித் தலைவர் சாகித் அப்ரிடி, “இந்தியாவில் விளையாடும் போது எனக்கு ஏற்படுகிற மகிழ்ச்சி அளவுக்கு மற்ற இடங்களை விட அதிகம். என் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி காலத்தில் இருக்கிறேன். இந்தியாவில் எனக்கு கிடைக்கும் அன்பை வாழ்நாள் முழுவதும் நினைவு கூர்வேன்.

இந்தியாவில் எங்கள் மீது காட்டப்படும் அன்பானது, பாகிஸ்தானில் கிடைப்பதை விட அதிகம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் யார் அழுத்ததை சமாளித்து ஆடுகிறார்களோ அவர்களே வெற்றி பெற முடியும்” என்று அப்ரிடி தெரிவித்தார்.