
அரியானா மாநிலம் ரோட்டாக்கை அடுத்துள்ள ரிதால் கிராமத்தை சேர்ந்த கபடி வீரர் சுக்விந்தர்சிங். 24 வயதான சுக்விந்தர்சிங் நேற்று முன்தினம் மாலை பயிற்சியை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே செல்போனில் பேசிய படி நடந்து வந்து கொண்டு இருந்த போது சாலையில் எதிரே ஸ்கூட்டரில் வந்த 2 மர்ம நபர்கள் சுக்விந்தர்சிங்கை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் மார்பில் குண்டு பாய்ந்த சுக்விந்தர்சிங் தரையில் சரிந்தார். அருகில் வந்து பார்த்த அவர்கள் மீண்டும் தலையில் சுட்டு விட்டு தப்பி சென்றனர்.
இதில் சம்பவ இடத்திலேயே சுக்விந்தர்சிங் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் தெளிவாக பதிவாகி இருக்கிறது. இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை.





