நாய்களை சரியாக வளர்க்காவிட்டால் உரிமையாளருக்கு 14 ஆண்டுகள் சிறை!!

605

Dogs

பிரித்தானிய நாட்டில் நாய்களை சரியாக வளர்க்காமல் அவற்றால் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உரிமையாளர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்க வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய நாட்டின் தண்டனை வழங்கும் கவுன்சில் நேற்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘2014ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆபாத்துமிக்க நாய்கள் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.

இந்த திருத்தங்கள் மூலம் நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது கடுமையான விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளன. புதிய நடைமுறைகளில் சிலவற்றை பார்ப்போம்.

*ஆபத்தான மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட நாய்களை பொதுமக்கள் வளர்க்க கூடாது.

* நாய்கள் மற்றவர்கள் மீது மிகுந்த ஆவேசம் அடையும் வகையில் அவற்றிற்கு பயிற்சி அளிக்க கூடாது.

* நாய்களினால் மற்றவர்களுக்கு காயம், படுகாயம் ஏற்பட்டால் அந்த நாயின் உரிமையாளருக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

* ஒரு நாயால் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால், அந்த நாயின் உரிமையாளருக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் உள்ளிட்ட புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

தடைசெய்யப்பட்ட நாய்கள்:

பிட் புல் டெரியர் (pit bull terrier)
ஜப்பானிய டோசா (Japanese tosa)
டோகோ அர்ஜெண்டினோ (dogo Argentino)
ஃபிலா பிரேசிலீரோ (fila Braziliero) போன்ற நாய்களை வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிபதி Richard Williams பேசியபோது, ’கடந்த 10 ஆண்டுகளில் நாய்களினால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 76 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2015ம் ஆண்டு மே மாதம் வரை எடுக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 13 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் நாய்கள் தாக்கியதால் மரணமடைந்துள்ளனர்.

எனவே இந்த குற்றங்களை தடுக்க தற்போது ஏற்படுத்த உள்ள சட்ட திருத்தங்கள் எதிர்வரும் யூலை மாதம் முதல் நடைமுறைக்க வரவுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.