ரஷ்யாவில் விமான விபத்தில் 61 பேர் பலி!!

583

Fli

பிளை டுபாய் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று இன்று சனிக்கிழமை ரஷ்யாவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 61 பேரும் பலியாகியுள்ளனர்.

டுபாயில் இருந்து பயணித்த எப் இசட் 981 ரக பயணிகள் விமானம் தெற்கு ரஷ்யாவில் உள்ள ரொஸ்டாவ் ஒன் டோன் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக உரிய வெளிச்சம் இல்லாமல் இருந்ததன் காரணமாக விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விமானத்தில் 55 பயணிகள் இருந்ததாகவும், 6 பேர் விமான ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து ரொஸ்டாவ் ஒன் டோன் விமான நிலையத்தை நோக்கிப் பயணிக்கும் அனைத்து விமானங்களும் மற்றொரு விமான நிலையத்திற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.