வவுனியா நகரகோட்ட தமிழ்ப் பிரிவிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான திறனாய்வு போட்டி கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஞா. இளையதம்பி தலைமையில் நேற்று (18.03.2016) மாலை நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி செ.அன்ரன்சோமராஜா மேலும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி சிதம்பரநாதன், வைத்தியர் புவிகரன், நகரசபை கணக்காளர் ஆகியோர் உட்பட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை சார் நலன்விரும்பிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.






